திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு விழாவுக்கு சிறப்பு ரெயில் இயக்கம்

நெல்லை-திருச்செந்தூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
தூத்துக்குடி,
திருச்செந்தூர் முருகன் கோவிலில் 14 ஆண்டுகளுக்குப்பின் குடமுழுக்கு விழா வரும் 7ம் தேதி நடைபெறுகிறது. கோவில் குடமுழுக்கையொட்டி தமிழகம் முழுவதிலும் இருந்து 5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் திருச்செந்தூர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, நெல்லை-திருச்செந்தூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, நெல்லையில் இருந்து காலை 9.15க்கு புறப்படும் சிறப்பு ரெயில், 10.50 மணிக்கு திருச்செந்தூரை அடைய உள்ளது. மறு மார்க்கமாக காலை 11.20க்கு புறப்படும் ரயில் மதியம் 12.55க்கு நெல்லையை வந்தடைய உள்ளது.
Related Tags :
Next Story






