பாஜகவின் சொந்த அரசியலுக்காக மாநிலங்களை தண்டிக்கக்கூடாது: கனிமொழி எம்.பி


பாஜகவின் சொந்த அரசியலுக்காக மாநிலங்களை தண்டிக்கக்கூடாது: கனிமொழி எம்.பி
x

பாஜகவின் சொந்த அரசியலுக்காக மாநிலங்களை தண்டிக்கக்கூடாது என்று திமுக எம்.பி. கனிமொழி கூறினார்.

சென்னை,

தொகுதி மறுவரை குறித்து திமுக எம்.பி. கனிமொழி வீடியோ வெளியிட்டு பேசியதாவது:-

தொகுதி மறுவரையறையால் தமிழ்நாடு எந்த நாடாளுமன்ற தொகுதிகளையும் இழக்காது" என அமித்ஷா கூறுகிறார். Pro rata அடிப்படையில் தொகுதி மறுவரையறை நடக்கும் எனக் கூறுகிறார். தமிழ்நாட்டில் உள்ள பாஜக தலைவர்களுக்கே அதற்கு அர்த்தம் தெரியவில்லை.

மத்திய மந்திரி அமித்ஷாவின் கருத்து தொடர்பாக இப்போதே தெளிவு தேவை. தொகுதி மறுவரையில் தென்மாநிலங்கள் தெளிவைக் கோருகின்றன. இதுவரையிலான ஆதாரங்கள் தென்னிந்தியாவின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் வகையிலே உள்ளன. எந்த அடிப்படையில் தொகுதி மறுவரையரை நடக்கும் என்பதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

மக்கள்தொகை அடிப்படையில் இது நடந்தால், இத்தனை ஆண்டுகளாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு, மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களின் பிரிநிதித்துவம் குறையும். அதேசமயம் மக்கள்தொகையை பொருட்படுத்தாத மாநிலங்களுக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும். பாஜகவின் சொந்த அரசியலுக்காக, மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களை தண்டிக்கக்கூடாது. இவ்வாறு அதில் பேசியுள்ளார்.

1 More update

Next Story