நற்பணி மன்றம் துவங்கிய ஆதரவாளர்கள் - விளக்கம் கொடுத்த அண்ணாமலை


நற்பணி மன்றம் துவங்கிய ஆதரவாளர்கள் - விளக்கம் கொடுத்த அண்ணாமலை
x

உங்கள் குடும்பத்தினர் நலனை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை கொடுக்குமாறு அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை,

திருநெல்வேலி மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பெயரில், அண்ணாமலை நற்பணி மன்றம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இம்மன்றத்திற்கான கொடியை மன்றத்தின் நிறுவனத் தலைவர் நெல்லை வேல்கண்ணன் அறிமுகப்படுத்தியுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், இதுகுறித்து பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

வணக்கம். இன்றைய தினம், திருநெல்வேலியில், எனது பெயரில் நற்பணி மன்றம் அமைத்து, கொடி அறிமுகம் செய்துள்ளதாக, ஊடகங்களில் வந்த செய்தி கண்டேன். நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்புக்கு மிகுந்த கடமைப்பட்டிருக்கிறேன். எனினும், இது போன்ற அமைப்புகள், கொடி உள்ளிட்டவற்றில் எனக்கு உடன்பாடு இல்லை.

எனவே, தயவுசெய்து, என் பெயர், புகைப்படம் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தும் இது போன்ற செயல்பாடுகளை உடனடியாகக் கைவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். வருங்காலத்திலும், இது போன்ற செயல்பாடுகளைத் தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

சுவர் இருந்தால்தான் சித்திரம். எனவே, அனைவரும் முதலில், உங்கள் வாழ்க்கைக்கு, உங்கள் குடும்பத்தினர் நலனை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்கள் அனைவரின் அன்பிற்கும், ஆதரவுக்கும் மீண்டும் எனது மனமார்ந்த நன்றிகள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story