‘இது என்னுடைய கடைசி அரசியல் யுத்தமாக கூட இருக்கலாம்’ - பொதுக்குழு கூட்டத்துக்கு ராமதாஸ் உருக்கமான அழைப்பு


‘இது என்னுடைய கடைசி அரசியல் யுத்தமாக கூட இருக்கலாம்’ - பொதுக்குழு கூட்டத்துக்கு ராமதாஸ் உருக்கமான அழைப்பு
x

கோப்புப்படம்

ஒருகாலத்தில் 20 எம்.எல்.ஏ.க்கள் இருந்த பா.ம.க. இன்று அங்கீகாரத்தையே இழந்துள்ளதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சேலத்தில், பா.ம.க. பொதுக்குழு கூட்டம் நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி பா.ம.க.வினருக்கு அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 5 நிமிட காணொலி மூலம் உருக்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பான காணொலியில் அவர் பேசியிருப்பதாவது:-

29-ந்தேதி அன்று சேலத்தில் நடைபெற உள்ள பா.ம.க.வின் பொதுக்குழு கூட்டத்திற்கு இன்னும் 24 மணி நேரமே எஞ்சியுள்ளது. இந்தக் கூட்டம் வெறும் நிர்வாக நிகழ்வு அல்ல, "இது உண்மையான பா.ம.க.வின் மறுபிறப்பு. இது குடும்ப சண்டையல்ல, பதவிக்கான போர் அல்ல. நாம் எல்லோரும் சேர்ந்து உழைத்து உருவாக்கிய இயக்கத்தின் ஆன்மாவை காப்பாற்றும் போராட்டம்.

ஒருகாலத்தில் 20 எம்.எல்.ஏ.க்கள் இருந்த பா.ம.க. இன்று அங்கீகாரத்தையே இழந்துள்ளது. இந்த சூழலில், சேலத்தில் கூடும் பொதுக்குழு பா.ம.க.வின் புதிய அத்தியாயத்தின் தொடக்கம். வருகிற சட்டமன்ற தேர்தலில் 25 தொகுதிகளில் வென்று ஆட்சியில் பங்கு பெற்று, இழந்த அங்கீகாரத்தையும், கட்சி சின்னத்தையும் மீட்டெடுக்கப் போகும் பயணத்தின் முதல் படி.

"இது என் கடைசி அரசியல் யுத்தமாக கூட இருக்கலாம். ஆனால் என் கடைசி மூச்சு இருக்கிற வரைக்கும், இந்த இயக்கத்துக்காகவும், என் மக்களுக்காகவும் போராடுவேன்". சேலம் பொதுக்குழுவில் கலந்துகொண்டு, உண்மையோடும், உழைப்போடும், உண்மையான பா.ம.க.வோடும் நிற்க ஒவ்வொரு தொண்டரும் முன் வர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

1 More update

Next Story