திருநெல்வேலி: கொலை முயற்சி வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது


திருநெல்வேலி: கொலை முயற்சி வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
x

பாளையங்கோட்டை பகுதியில் 2 பேர் கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்டு, பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாநகரம், பாளையங்கோட்டை, ராஜேந்திரநகரைச் சேர்ந்த ஜெயராஜ் மகன் பார்த்தீபன் (வயது 20) மற்றும் தூத்துக்குடி மாவட்டம், வசவப்புரத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் ஹரிசுப்பிரமணியன்(20) ஆகிய 2 பேரும் கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்டு, பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

இதனையடுத்து திருநெல்வேலி மாநகர போலீஸ் துணை கமிஷனர் (கிழக்கு) வினோத்சாந்தாராம், போலீஸ் உதவி கமிஷனர் (பாயைங்கோட்டை சரகம்) (பொறுப்பு) நிக்சன் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பாளையங்கோட்டை) காசிப்பாண்டியன் ஆகியோரின் பரிந்துரையின் பேரில் மதுரை சரக டிஐஜி மற்றும் திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் (கூடுதல் முழுப்பொறுப்பு) அபிநவ்குமார் உத்தரவுப்படி பார்த்தீபன், ஹரிசுப்பிரமணியன் ஆகிய 2 பேரும் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டனர்.

1 More update

Next Story