திருநெல்வேலி: கொலை முயற்சி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது


திருநெல்வேலி: கொலை முயற்சி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
x

திருநெல்வேலியில் வாலிபர் ஒருவர் கொலை முயற்சி, அடிதடி, மிரட்டல், கொள்ளை போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக மானூர் போலீசார் கவனத்திற்கு வந்தது.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம், தேவர்குளம் பகுதியில் கொள்ளை மற்றும் மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட எட்டாங்குளம், வடக்கு தெருவை சேர்ந்த ஸ்ரீரங்கம் என்பவரின் மகன் மகாராஜன்(எ) அய்யாக்குட்டி (வயது 22) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் கொலை முயற்சி, அடிதடி, மிரட்டல் மற்றும் கொள்ளை போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக மானூர் வட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் கவனத்திற்கு வந்தது.

இதனையடுத்து அவர், மகாராஜன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன்பேரில் மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில், மகாராஜன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் இன்று அடைக்கப்பட்டார்.

1 More update

Next Story