நாடாளுமன்ற தேர்தல்: தமிழ்நாட்டில் போட்டியிடும் வேட்பாளர்கள் எண்ணிக்கை கட்சி வாரியாக வெளியீடு


நாடாளுமன்ற தேர்தல்: தமிழ்நாட்டில் போட்டியிடும் வேட்பாளர்கள் எண்ணிக்கை கட்சி வாரியாக வெளியீடு
x

தமிழ்நாட்டில் 609 சுயேச்சை வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

சென்னை,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20-ந்தேதி தொடங்கி 27-ந்தேதி நிறைவடைந்தது. அன்றைய நிலவரப்படி 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 1,403 பேர் 1,749 மனுக்களை தாக்கல் செய்து இருந்தனர்.

இந்த மனுக்கள் மீதானபரிசீலனை 28-ந்தேதி நடைபெற்றது. அப்போது 1,085 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதைத்தொடர்ந்து இறுதி வேட்பாளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையம் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிட்டது. அதன்படி தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் அதிக பட்சமாக கரூர் தொகுதியில் 54 பேர் போட்டியிடுகின்றனர். குறைந்தபட்சமாக நாகப்பட்டினம் தொகுதியில் 9 பேர் மட்டுமே போட்டியில் உள்ளனர்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கையை கட்சி வாரியாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில் 609 சுயேச்சை வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

வேட்பாளர்கள் எண்ணிக்கை கட்சி வாரியாக விபரம்:-








Next Story