நாடாளுமன்ற தேர்தல்: செல்வப்பெருந்தகையின் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் அறிவிப்பு


நாடாளுமன்ற தேர்தல்: செல்வப்பெருந்தகையின் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் அறிவிப்பு
x

கோப்புப்படம்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையின் தேர்தல் பிரசார சுற்றுப்பயண விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் ஊடகம் மற்றும் செய்தித் தொடர்புத் துறை தலைவர் ஆனந்த் ஸ்ரீநிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஏப்ரல் 1-ந் தேதி (நாளை) சென்னையில் இருந்து புறப்பட்டு ஆற்காடு, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரியில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். 2-ந் தேதி சேலம், நாமக்கல், கரூரில் பிரசாரம் செய்கிறார். 3-ந் தேதி ஈரோடு, திருப்பூர், பொள்ளாச்சி, கோயம்புத்தூரில் பிரசாரம் மேற்கொள்கிறார். 4-ந் தேதி ஊட்டி, திண்டுக்கல்லில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

அதைத் தொடர்ந்து 5-ந் தேதி சோழவந்தான், மதுரை, பரமக்குடி, விருதுநகரில் பிரசாரம் மேற்கொள்கிறார். 6-ந் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலியிலும், 7-ந் தேதி ராதாபுரம், விளவங்கோடு, நாகர்கோவிலிலும் பிரசாரம் மேற்கொள்கிறார்.

பின்னர், 9-ந் தேதி பெரம்பலூர், திருச்சி, சிவகங்கையிலும், 10-ந் தேதி தஞ்சாவூர், திருவாரூர், கும்பகோணத்திலும், 14-ந் தேதி விழுப்புரம், சிதம்பரத்திலும், 15-ந் தேதி புதுச்சேரி, கடலூரிலும், 16-ந் ஸ்ரீபெரும்புதூரிலும், 17-ந் தேதி திருவள்ளூரிலும் பிரசாரம் மேற்கொள்கிறார்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Next Story