வயலில் நாற்று நட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அ.தி.மு.க. வேட்பாளர்


வயலில் நாற்று நட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அ.தி.மு.க. வேட்பாளர்
x
தினத்தந்தி 5 April 2024 5:11 AM GMT (Updated: 5 April 2024 5:47 AM GMT)

வயலில் நாற்று நட்டு அ.தி.மு.க. வேட்பாளர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திருச்சி,

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், திருச்சி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக கருப்பையா அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அந்தவகையில், கந்தர்வகோட்டை பகுதியில் இன்று கருப்பையா வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, வயலில் நாற்று நடவு செய்துகொண்டிருந்த பெண்களை சந்தித்தார். பின்னர், திடீரென வயலில் இறங்கிய அ.தி.மு.க. வேட்பாளர் கருப்பையா பெண்களுடன் நாற்றுநட்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.


Next Story