திமுக அரசைக் கண்டித்து வருகிற 27-ம் தேதி பாஜக ஆர்ப்பாட்டம் - அண்ணாமலை அறிவிப்பு


திமுக அரசைக் கண்டித்து வருகிற 27-ம் தேதி பாஜக ஆர்ப்பாட்டம் - அண்ணாமலை அறிவிப்பு
x

திமுக அரசைக் கண்டித்து வருகிற 27-ம் தேதி பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அண்ணாமலை அறிவித்துள்ளார்.

சென்னை,

இந்தி திணிப்புக்கு எதிராக தமிழக சட்டசபையில், திமுக அரசு தீர்மானம் நிறைவேற்றி இருந்தது. இந்த நிலையில், திமுக அரசைக் கண்டிக்கும் வகையில் பாஜக சார்பில் வருகிற 27-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "தாய்மொழியாம் தமிழுக்கு முடிவுரை எழுத முயற்சிக்கும் திறனற்ற திமுக அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அக்டோபர் 27ஆம் தேதி தமிழக பாஜகவின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும்.

திமுகவின் கபட நாடகங்களை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவோம்! " என்று குறிப்பிட்டுள்ளார்.



Next Story