கனமழை எதிரொலி: தேனி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


கனமழை எதிரொலி: தேனி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
x

கோப்புப்படம் 

கனமழை காரணமாக தேனி மாவட்டத்தில் இன்று அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் மீண்டும் பருவமழை தீவிரம் அடைய தொடங்கி இருக்கிறது. தமிழகம் மற்றும் அதனையொட்டியுள்ள கேரள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று (23-11-2023) முதல் 3 நாட்களுக்கு அனேக இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை காரணமாக நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் இன்று (23-11-2023) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். இந்த நிலையில் தற்போது கனமழை காரணமாக தேனி மாவட்டத்தில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா அறிவித்துள்ளார்.


Next Story