"எம்.ஜி.ஆர். தி.மு.க.வை விட்டுச் சென்ற போது தேர்தலில் கைகொடுத்தது சென்னையும், தஞ்சையும் தான்" - அமைச்சர் கே.என்.நேரு


எம்.ஜி.ஆர். தி.மு.க.வை விட்டுச் சென்ற போது தேர்தலில் கைகொடுத்தது சென்னையும், தஞ்சையும் தான் - அமைச்சர் கே.என்.நேரு
x

தி.மு.க.வை விட்டு எம்.ஜி.ஆர் சென்ற போது தேர்தலில் வெற்றியை தக்கவைத்தது சென்னையும், தஞ்சையும் தான் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

சென்னை,

சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க.வின் செயல்வீரர்கள் கூட்டம் வானகரத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க. பொருளாளரும், நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு, தி.மு.க. முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியின் போது மேடையில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, எம்.ஜி.ஆர். தி.மு.க.வை விட்டுச் சென்ற போது தி.மு.க.விற்கு தேர்தலில் வெற்றியை தக்கவைத்த மாவட்டங்கள் சென்னையும், தஞ்சையும் தான் என்று தெரிவித்தார். எனவே சென்னையில் இருக்கும் இயக்கத் தோழர்களுக்கு என்றென்றும் தி.மு.க. கடமைப்பட்டிருக்கிறது என்று அவர் கூறினார்.


Next Story