"பிரதமர் மோடி தண்ணீரில் வடை சுடுகிறார்" - அமைச்சர் சேகர்பாபு


பிரதமர் மோடி தண்ணீரில் வடை சுடுகிறார் - அமைச்சர் சேகர்பாபு
x

பிரதமர் மோடியை தமிழக மக்கள் வஞ்சிக்க தயாராகி விட்டனர் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

சென்னை,

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது:-

பிரதமர் மோடியின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தி.மு.க.வை பார்த்துதான் பா.ஜ.கவுக்கு வயிற்றில் புளியை கரைக்கிறது. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்டபோது வராத பிரதமர், தன்னுடைய அரசியல் சுயலாபத்திற்காக தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வருகிறார்.

நிவாரண நிதியாக தற்போது வரை சல்லி காசு கூட தராமல் வஞ்சிக்கும் பிரதமரை தமிழக மக்கள் வஞ்சிக்க தயாராகி விட்டனர். எத்தனை முறை பிரதமர் மோடி தமிழகம் வந்தாலும் பா.ஜ.க. டெபாசிட் கூட பெற முடியாது. பிரதமர் மோடி தண்ணீரில் வடை சுடுகிறார்.

உறவுக்கு கைகொடுப்போம் உரிமைக்கு தோல் கொடுப்போம் என்பதுதான் தி.மு.க.வின் நிலைப்பாடு. வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. அமோக வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story