சென்னை துறைமுகம் மற்றும் கல்பாக்கம் ஆகிய 2... ... பயங்கரவாத தாக்குதல் இனியும் நடைபெறாமல் இருக்கவே "ஆபரேஷன் சிந்தூர்"  - ராணுவ அதிகாரிகள் விளக்கம்
Daily Thanthi 2025-05-07 10:57:45.0
t-max-icont-min-icon

சென்னை துறைமுகம் மற்றும் கல்பாக்கம் ஆகிய 2 பகுதிகளில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகையை ராணுவம் தொடங்கியுள்ளது. தலைநகர் டெல்லி, மும்பை உள்ளிட்ட இடங்களில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை தொடங்கப்பட்டு உள்ளது.

இதன்படி மின் விளக்குகளை அணைத்தும், மக்களை பாதுகாப்பாக வெளியேற்றியும் ஒத்திகை பார்க்கப்படும். இதில், பல்வேறு துறைகளை சேர்ந்த வீரர்கள், மாநில பேரிடர் மேலாண்மை குழுவினர் ஈடுபடுத்தப்படுவார்கள்.  இதனால் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.

1 More update

Next Story