பயணிகள் கவனத்திற்கு... சென்னை ரெயில்கள் இன்று மண்டபத்தில் இருந்து புறப்படும்

ராமேசுவரம் பாம்பன் பாலம் பகுதியில் மணிக்கு 60.07 கி.மீ. வேகத்தில் காற்று வீசி வருவதால், ரெயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
பயணிகள் கவனத்திற்கு... சென்னை ரெயில்கள் இன்று மண்டபத்தில் இருந்து புறப்படும்
Published on

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

ராமேசுவரம் பாம்பன் பாலம் பகுதியில் மணிக்கு 60.07 கி.மீ. வேகத்தில் காற்று வீசி வருவதால், ரெயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ராமேசுவரத்தில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு தாம்பரம் நோக்கி புறப்படும் ரெயில் மண்டபத்தில் இருந்து புறப்படும்.

இதேபோல், ராமேசுவரத்தில் இருந்து இன்று மாலை 5.50 மணிக்கு சென்னை எழும்பூர் நோக்கி புறப்படும் ரெயிலும் மண்டபத்தில் இருந்து புறப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com