பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது எடப்பாடி பழனிசாமிக்கு தேவையற்ற சுமை - சீமான் பேட்டி


பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது எடப்பாடி பழனிசாமிக்கு தேவையற்ற சுமை - சீமான் பேட்டி
x

கோப்புப்படம் 

தமிழ்நாட்டை யார் ஆள்வது என்பதில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது எடப்பாடி பழனிசாமிக்கு தேவையற்ற சுமை என்று சீமான் கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியை பற்றி சிந்திக்க எனக்கு நேரமில்லை. அவர்கள் முடிவெடுத்து சேர்ந்திருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் எடப்பாடி பழனிசாமி இந்தியாவை யார் ஆள்வது என்பதில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருந்தால் அது அவருக்கு பலனை தந்திருக்கும். தமிழ்நாட்டை யார் ஆள்வது என்பதில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது அவருக்கு தேவையற்ற சுமை.

இந்தியாவை யார் ஆள்வது என்பதில் பா.ஜ.க.வுடன் இந்த அணிகளெல்லாம் இருந்திருந்தால், 15 எம்.பி.க்கள், மத்தியில் 2 மந்திரிகள் என இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அந்த இடத்தில் கணிப்பு தவறாக போய்விட்டது என்று நான் பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story