திருநெல்வேலி: கொலை முயற்சி வழக்கு குற்றவாளி தடுப்பு காவல் சட்டத்தில் கைது

பணகுடி பகுதியில் ஒருவர் கொலை முயற்சி, வழிப்பறி, கொலை மிரட்டல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக பணகுடி போலீசார் கவனத்திற்கு வந்தது.
திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பகுதியில் கொலை மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட காவல்கிணறு, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் நாகராஜன் (வயது 42) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் கொலை முயற்சி, வழிப்பறி, கொலை மிரட்டல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக பணகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் கவனத்திற்கு வந்தது.
இதனையடுத்து அவர் மேற்சொன்ன நபர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன் பேரில் மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின்பேரில், நாகராஜன் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story






