திருநெல்வேலி: பெண்ணை கம்பால் தாக்கியவருக்கு சிறை தண்டனை


திருநெல்வேலி: பெண்ணை கம்பால் தாக்கியவருக்கு சிறை தண்டனை
x

திருக்குறுங்குடி அருகே முன் விரோதம் காரணமாக சுந்தர்ராஜபுரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை, அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் அசிங்கமாக பேசி கம்பால் தாக்கினார்.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி அருகே கடந்த 2015-ம் ஆண்டு முன் விரோதம் காரணமாக சுந்தர்ராஜபுரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை, அதே பகுதியைச் சேர்ந்த அருள்முருகன் (வயது 40) என்பவர் அசிங்கமாக பேசி கம்பால் தாக்கினார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, புலன் விசாரணை முடிவில், நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து, வழக்கின் விசாரணையானது, வள்ளியூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் அருள்முருகன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, குற்றவியல் நீதித்துறை நடுவர் மோசஸ் ஜெபசிங் நேற்று குற்றவாளிக்கு 1 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கில் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த நாங்குநேரி உட்கோட்ட டி.எஸ்.பி. தர்ஷிகா நடராஜன், திருக்குறுங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணா காந்தி, இந்த வழக்கினை திறம்பட புலன் விசாரணை செய்த அப்போதைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரசல் ராஜ் (தற்போது ஓய்வு), குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் ஆலன் ராயன் ஆகியோரை மாவட்ட எஸ்.பி. பிரசண்ண குமார் பாராட்டினார்.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையானது, நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் சாட்சிகளை ஆஜர்ப்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரும் முனைப்பில் தொடர்ந்து உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

1 More update

Next Story