திருநெல்வேலியில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை: வாலிபருக்கு 5 ஆண்டு சிறை


திருநெல்வேலியில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை: வாலிபருக்கு 5 ஆண்டு சிறை
x

திருநெல்வேலி மாவட்டம், பிரான்சேரி பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒரு சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2019-ம் ஆண்டு பிரான்சேரி, கீழத் தெருவை சேர்ந்த சீதாராமன் (வயது 31) என்பவர் ஒரு சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் முன்னீர்பள்ளம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு சீதாராமன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இவ்வழக்கு விசாரணை திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது நீதிமன்ற விசாரணை முடிவு பெற்றது. அதில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் நீதிபதி சுரேஷ்குமார், குற்றவாளி சீதாராமனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து, சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த சேரன்மகாதேவி உட்கோட்ட டி.எஸ்.பி. சத்யராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி மற்றும் முன்னீர்பள்ளம் காவல்துறையினரையும், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் உஷா ஆகிய அனைவரையும் திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.

1 More update

Next Story