பஞ்சாப், பீகார் மாநில வேட்பாளர்கள் தேர்வு: காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆலோசனை


பஞ்சாப், பீகார் மாநில வேட்பாளர்கள் தேர்வு: காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆலோசனை
x

பஞ்சாப், பீகார் மாநில வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பணி குழு டெல்லியில் நேற்று கூடியது.

புதுடெல்லி,

2024 நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அந்த வகையில் 7-வது கட்ட தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 மக்களவை தொகுதிகளுக்கு ஜூன் 1-ந் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பீகாரில் உள்ள 40 மக்களவை தொகுதிகளில் 4 தொகுதிகளுக்கு கடந்த 19-ந் தேதி முதற்கட்ட தேர்தல் நடந்து முடிந்தது. எஞ்சிய 36 தொகுதிகளுக்கு ஜூன் 1-ந் தேதி வரை 6 கட்டங்களாக தேர்தல் நடக்கவுள்ளது.

இந்த நிலையில் பஞ்சாப் மற்றும் பீகார் மாநிலங்களில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பணி குழு டெல்லியில் நேற்று கூடியது. இந்த கூட்டத்தில் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மூத்த தலைவர்களான சல்மான் கஹர்ஷித் மற்றும் அம்பிகா சோனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் இரு மாநிலங்களுக்கும் பல பெயர்கள் விவாதிக்கப்பட்டதாகவும், முக்கிய இடங்கள் குறித்த இறுதி முடிவு காங்கிரஸ் தலைவருக்கு விடப்பட்டுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Next Story