குவைத்தில் இருந்து மும்பைக்கு படகில் தப்பி வந்த 3 தமிழர்களின் காவல் நீடிப்பு


குவைத்தில் இருந்து மும்பைக்கு படகில் தப்பி வந்த 3 தமிழர்களின் காவல் நீடிப்பு
x

குவைத்தில் இருந்து படகில் மும்பைக்கு தப்பி வந்த 3 தமிழர்களை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

தமிழ்நாட்டின் கன்னியாகுமரியை சேர்ந்த வினோத் அந்தோணி (வயது29), சயா அந்தோணி அனீஷ் (29), ராமநாதபுரத்தை சேர்ந்த நிடிசோ டிடோ 2 ஆண்டுகளுக்கு முன் வேலைக்காக குவைத் சென்றனர். 3 பேருக்கும் அவர்களின் உரிமையாளர் முறையாக சம்பளம் கொடுக்கவில்லை. பாஸ்போர்ட்டையும் அவர் பறித்து வைத்து இருந்தார். 3 தமிழர்களும் தங்கள் நிலை போலீஸ் மற்றும் தூதரகத்தில் புகார் அளித்தும் பலன் கிடைக்கவில்லை.

இதனால் 3 பேரும் கடந்த மாதம் 28-ந் தேதி உரிமையாளரின் படகில் குவைத்தில் இருந்து தப்பித்தனர். அவர்கள் சவுதி அரேபியா, கத்தார், துபாய், ஒமன், பாகிஸ்தான் கடல் வழியாக இந்தியாவின் மும்பை வந்தடைந்தனர். பாஸ்போர்ட் மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாமல் இந்தியா வந்த அவர்களை மும்பை போலீசார் கைது செய்தனர். 3 பேரும் போலீஸ் காவலில் அடைக்கப்பட்டு இருந்தனர்.

போலீஸ் காவல் முடிந்ததால் நேற்று தமிழர்கள் 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதைத்தொடர்ந்து 3 பேரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story