கணவன், மனைவியை தாக்கியவர் கைது - 8 பேருக்கு வலைவீச்சு


கணவன், மனைவியை தாக்கியவர் கைது - 8 பேருக்கு வலைவீச்சு
x

திருவள்ளூர் அருகே கணவன், மனைவியை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 8 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.

திருவள்ளூர்

திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் கொண்டஞ்சேரி கூவம் பஸ் நிலையம் அருகே வசித்து வருபவர் சார்லஸ் (வயது 44). இவர் தனது குடும்பத்தாருடன் கொண்டஞ்சேரி பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு சென்று வந்துள்ளார். பின்னர் வேறு ஒரு தேவாலயத்திற்கு சார்லஸ் குடும்பத்தினருடன் செல்ல தொடங்கினார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 29-ந்தேதி இரவு சார்லஸ், அவரது மனைவி விக்டோரியா, மகன் சாருகேஷ், மகள் நித்யா ஆகியோருடன் வீட்டில் இருந்து உள்ளனர். அப்போது அங்கு 8 பேருடன் வந்த பாதிரியார் சார்லஸ் மற்றும் அவரது குடும்பத்தினரை இரும்பு கம்பியாலும், உருட்டுக்கட்டையாலும் தாக்கி உள்ளனர்.

இதில் காயமடைந்த 4 பேரும் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நடந்த சம்பவம் குறித்து மப்பேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து அன்புவை கைது செய்தனர். மேலும் இது சம்பந்தமாக பாதிரியார் உள்பட 8 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story