திருநெல்வேலியில் கஞ்சா விற்றவர் கைது: 1.25 கிலோ பறிமுதல்

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் களக்காடு அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த மறுகால்குறிச்சியை சேர்ந்த சுப்பையா(எ) சுரேஷ் (வயது 39) என்பவரை போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 1 கிலோ 250 கிராம் கஞ்சாவை அவர் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சுப்பையா(எ) சுரேஷை நேற்று முன்தினம் கைது செய்தார். மேலும் அவரிடம் இருந்து 1 கிலோ 250 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story






