திருநெல்வேலி: போக்சோ வழக்கு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த நபர் போக்சோ வழக்கு குற்றவாளி ஆவார்.
திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம், செட்டிமேடு இந்திரா காலனியை சேர்ந்த சபரிமுத்து மகன் செல்வம் (வயது 44) என்பவர் போக்சோ வழக்கு குற்றவாளி ஆவார். இவர் மீது அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வனிதா தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன் பேரில், மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின் பேரில் நேற்று (29.7.2025) குற்றவாளி செல்வம் குண்டர் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story






