திருவள்ளூரில் 16 மின் திருட்டுகள் கண்டுபிடிப்பு: ரூ.56 ஆயிரம் செலுத்தியதால் வழக்கு பதியவில்லை

திருவள்ளூர் மின்பகிர்மான வட்டத்திற்குட்பட்ட பகுதியில் கூட்டு ஆய்வு மேற்கொண்ட போது ரூ.11.42 லட்சம் மதிப்பிலான 16 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூரில் 16 மின் திருட்டுகள் கண்டுபிடிப்பு: ரூ.56 ஆயிரம் செலுத்தியதால் வழக்கு பதியவில்லை
Published on

தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

14.11.2025 அன்று தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகத்தின் சென்னை அமலாக்க கோட்டத்திற்குட்பட்ட சென்னை/வடக்கு, சென்னை/மையம், சென்னை/தெற்கு, சென்னை/மேற்கு, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் அமலாக்க அதிகாரிகள் திருவள்ளூர் கோட்டம், திருவள்ளூர் மின்பகிர்மான வட்டத்திற்குட்பட்ட பகுதியில் கூட்டு ஆய்வு மேற்கொண்ட போது 16 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு, இழப்பீடு தொகையாக ரூ.11 லட்சத்து 41 ஆயிரத்து 630 மின் நுகர்வோருக்கு விதிக்கப்பட்டது.

மேலும் சம்பந்தப்பட்ட மின் நுகர்வோர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க முன்வந்து அதற்குரிய சமரசத் தொகை ரூ.56 ஆயிரத்தை செலுத்தியதால் அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் ஏதும் பதிவு செய்யப்படவில்லை. மின் திருட்டு சம்பந்தமான தகவல்களை செயற்பொறியாளர்/ அமலாக்கம்/ சென்னை கைபேசி 9445857591 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com