பிரதமர் மோடியை வீட்டிற்கு அனுப்பும்வரை தி.மு.க. தூங்கப்போவதில்லை; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்


பிரதமர் மோடியை வீட்டிற்கு அனுப்பும்வரை தி.மு.க. தூங்கப்போவதில்லை; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
x

பிரதமர் மோடியை வீட்டிற்கு அனுப்பும்வரை தி.மு.க. தூங்கப்போவதில்லை என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை,

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனை போட்டி நிலவி வருகிறது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், திருவண்ணாமலை தொகுதி தி.மு.க. வேட்பாளர் சி.என். அண்ணாதுரையை ஆதரித்து அக்கட்சியின் இளைஞரணி தலைவரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.

பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது,

தி.மு.க.விற்கு தூக்கம்போய்விட்டது என்று பிரதமர் மோடி கூறுகிறார். ஆம் எங்களுக்கு தூக்கம்போய்விட்டது. பிரதமர் மோடியை வீட்டிற்கு அனுப்பும்வரை தி.மு.க. தூங்கப்போவதில்லை. தூக்கம் பார்க்காமல் நாங்கள் தேர்தல் பிரசாரம் செய்யப்போகிறோம். திருவண்ணாமலையில் தி.மு.க. வேட்பாளரை வெற்றிபெறவைத்தால் நான் மாதம் 2 முறை இங்கு வந்து தங்கி உங்களின் தொகுதி பிரச்சினைகளை தீர்த்துவைப்பேன்' என்றார்.




Next Story