இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம்: தற்போதைய... ... ஜம்முவில் மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்
Daily Thanthi 2025-05-09 06:46:29.0
t-max-icont-min-icon

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம்: தற்போதைய நிகழ்வுகள் கவலை அளிக்கிறது - சீனா

இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் குறித்து, சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் கூறியதாவது:-

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான தற்போதைய நிலைமை குறித்து நேற்று சீனாவின் நிலைப்பாட்டை நாங்கள் பகிர்ந்து கொண்டோம். தற்போதைய நிகழ்வுகள் குறித்து சீனா கவலை கொண்டுள்ளது. இந்தியாவும், பாகிஸ்தானும் எப்போதும் ஒருவருக்கொருவர் அண்டை நாடுகளாகவே இருக்கும். அவர்கள் இருவரும் சீனாவின் அண்டை நாடுகளும் கூட.

சீனா அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் எதிர்க்கிறது. அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையின் பரந்த நலனுக்காக செயல்படவும், ஐ.நா. சாசனம் உட்பட சர்வதேச சட்டத்தைக் கடைப்பிடிக்கவும், அமைதியாக இருக்கவும், நிதானத்தைக் கடைப்பிடிக்கவும், நிலைமையை மேலும் சிக்கலாக்கும் நடவடிக்கைகளை எடுப்பதைத் தவிர்க்கவும் இரு தரப்பினரும் கேட்டுக்கொள்கிறோம்.

தற்போதைய பதட்டங்களைத் தணிப்பதில் ஆக்கபூர்வமான பங்கை வகிக்க சர்வதேச சமூகத்தின் மற்ற நாடுகளுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்

1 More update

Next Story